tamilnadu

img

காஷ்மீர் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க உத்தரவு

புதுதில்லி,நவ.21- ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு பிறப் பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதி லளிக்க வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது  உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலை மையிலான அமர்வு , ஜம்மு- காஷ்மீர்  நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சொலி சிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் மனுதாரரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் தாக்கல் செய்யும் விளக்க- பிரமாணப் பத்திரம் எந்த முடிவை யும் எட்ட உதவாது. எனவே, இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்த வில்லை என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிட வேண்டாம். என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய  அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது அனுராதா பாசின்,  குலாம் நபி ஆசாத் ஆகியோர் காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாட வும், ஊடகங்களுக்கு இருக்கும் தடை குறித்து தொடர்ந்த மனுக்களை மட்டுமே விசாரிக்கிறோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.